Sunday, 21 August 2016

என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
 என்ன தரப் போகிறாய் ( இசை )
 கிள்ளுவதைக கிள்ளி விட்டு
 ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

 காதலே நீ பூவெறிந்தால்
 எந்த மலையும் கொஞ்சம் குழையும்
 காதலே நீ கல்லெறிந்தால்
 எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
 இனி மீழ்வதா... இல்லை வீழ்வதா..
 உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
 அமுதென்பதா விஷமென்பதா
 உன்னை அமுத விஷமென்பதா ( இசை )

 என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

 காதலே உன் காலடியில்
 நான் விழுந்து விழுந்து தொழுதேன்
 கண்களை நீ மூடிக்கொண்டாய்
 நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
 இது மாற்றமா... தடுமாற்றமா..
 என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
 நீ தோழியா இல்லை எதிரியா
 என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
 என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு

No comments:

Post a Comment

DR=DREAM